Thursday, March 6, 2008

Aurangzeb -- terrorist



This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

Wednesday, 5 March, 2008


PathivuToolbar ©2005thamizmanam.com


தீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி


FACT என்கிற ஒரு அறக்கட்டளை தீவிரவாதத்தை எதிர்த்து விழிப்புணர்வை உறுவாக்கும் ஒரு அமைப்பு. சென்னையில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் ஒரு கண்காட்சியை சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறார்கள். 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அவுரங்கசீப் காலத்தில் நடந்த வன்முறைகளை, அவர் காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே விவரித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் பிகானீரில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அவுரங்கசீப்பின் தந்தையார் ஷாஜஹான் மற்றும், மூத்த சகோதரர் தாரா சுகோ, மற்ற மதத்தினரிடம் எவ்வாறு அன்புடன் இருந்தார்கள் என்பதை விவரிக்கும் ஆவணங்களூம், படங்களும் காட்சியில் வைத்துள்ளார்கள்.


அதே சமயம், அவுரங்கசீப் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தார் என்பதை விளக்கும் ஆவணங்களும், படங்களும் காட்சியில் உள்ளன.


ஒருமுறை ம்ராத்திய மன்னர் சிவாஜி, அவுரங்கசீப்பின் ஐம்ப்தாவது பிறந்த்நாள் விழாவிற்கு சென்று இருந்த சமயம், சிவாஜியை எவ்வர்று அவுரங்கசீப் அவமானப்படுத்தினார் என்பதையும் அதனால், சிவாஜி, அரசபையிலிருந்து வெளியேறியதையும் ஆவணங்கள் மற்றும் படம் மூலம் விவரித்துள்ளார்கள்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் சிங், அவுரங்கசீப்பால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதும் படம் மற்றும் ஆவணங்கள் மூலம் விவரித்துள்ளனர். அதனால்தான், தேஜ் பகதூ சிங் அவர்களின் மகன் குரு கோவிந்த சிங் ' கல்சா' என்கிற அமைப்பை 1699ம் ஆண்டு, தீவிரவாததிற்கு எதிராக துவங்கியதாக வரலாறு.


நல்ல குடும்பத்திலிருந்து வ்ந்தாலும், ஒரு சிலரது, அதிகார வெறியில், கொடூரமான தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதை இந்த கண்காட்சி அமைதியாக வெளிப்படுத்துகிறது.


Posted by K. Srinivasan at 10:41 PM

http://vetripadigal.blogspot.com/2008/03/blog-post.html

No comments: